Home செய்திகள் மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி..

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி..

by mohan

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலியானார்.மதுரை கே புதூர் ஜவஹர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 73 இவர் கோகலே மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால்செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் இவர்மீது மோதியது யார் எந்த வாகனம் என்று தெரியவில்லை .இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!