6
ராமேஸ்வரத்தில் இருந்து 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று (18.11.2020) காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்கள், கண்ணாடி பாட்டில்களை வீசினர். இதில் மீனவர் சேசுராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. ஜான் என்பவரது படகு மீது கற்களை வீசியதில் அப்படகிலிருந்த மீனவர்கள் மலைச்சாமி, கருப்பையா ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
You must be logged in to post a comment.