பாபரி மசூதியை இடித்த முக்கிய குற்றவாளிகள் விடுதலை செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ.,கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன. அதன் ஒரு பதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், ஆர்.எஸ். மங்கலம், தொண்டி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.ராமநாதபுரம் நகர் செயலர் நஜிமுதீன் தலைமை வகித்தார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மன்சூர், எஸ்டிபிஐ., மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாநில செயலர் முகமது ரசீன்,எஸ்டிபிஐ., மாவட்ட பொதுச்செயலாளா் பரக்கத்துல்லாஹ், பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பசீர் அலி, எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட பேச்சாளர் பஷீர் அஹமது, ராமநாதபுரம் சட்டமன்ற (மேற்கு) தொகுதி தலைவர் அப்துல் ஜலீல், துணைத்தலைவர் நூருல் ஜமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் முகமது யாசீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்டிபிஐ., கட்சி ராமநாதபுரம் தலைவர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார். ராமநாதபுரம் சட்டமன்ற (கிழக்கு) தொகுதி தலைவர் நவ்வா்ஷா தலைமையில் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி துணை தலைவர் அபுலா (என்ற) ஷேக் அப்துல்லா, செயலாளர் அன்வர் பேசினர். இணை செயலர் அப்துல் ஹாலிக், குழு உறுப்பினர் ஷேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் செயலர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ராஜா முகமது, செயலர் ஆரிப், திருவாடானை தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத், செயலர் முகமது ஹனிப் , இணைச் செயலர் ரிஸ்வான், மஜித், ஹாஜி அலி, பரமக்குடி நகர் தலைவர் அப்துல்லாஹ் சேட் மற்றும் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிா்வாகிகள் செயல்வீரர்கள், தோழமை கட்சிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.