கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் &கோ,வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான வசந்தகுமார் மற்றும் இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி இயற்கை எய்தினர்.,இவர்களது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.,
அந்த வகையில் மதுரை கீழவெளிவீதியில் உள்ள தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி திருவுருவ படத்திற்கு பொதுசெயலாளர் காசிலிங்கம், தலைவர் ஜெகந்நாதன், துணை பொதுச்செயலாளர்தமிழ்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, ரகுராஜா மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.