தமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ஊரடங்கு விதி முறைகளை மத்திய அரசு தளர்த்தி மாவட்டம் விட்டு , மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ – பாஸ் தேவையில்லை என்று அறிவித்து உள்ளது . ஆனால் திருமணம் , மருத்துவம் , நெருங்கிய உறவினரின் மரணம் மற்றும் வேறு இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் இ – பாஸ்சுக்கு விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மாவட்டம் விட்டு , மாவட்டம் சென்றுவர தமிழக அரசு அனுமதி அளிக்கிறது . இ – பாஸ் அனுமதி கோரி முறையாக ஆவணங்கள் சமர்பித்தாலும் , எவ்வித காரணமின்றி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது . இதன் காரணமாக இறப்பு , திருமணம் , மருத்துவம் போன்ற காரணங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இதற்கிடையில் மளிகை கடைகளிலும் , தனிப்பட்ட புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக ரூ .4000 / – வரை கொடுக்கும்பட்சத்தில் இ – பாஸ் வழங்கப்படுவதாக பத்திரிக்கைகளிலும் , ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன . எனவே இவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் . இ – பாஸ் மறுக்கப்படுவதால் , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது . கொரோனா காலத்தில் நிவாரண உதவிகூட வழங்கப்படுவதில்லை . எனவே , முறையாக எல்லா ஆவணங்களும் கொடுக்கின்றவர்களுக்கு தாமதமின்றி. இ பாஸ் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..