12
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் வளைனேந்தல் மீனவர் நல அறக்கட்டளை சார்பாக திருப்புல்லாணி வெள்ளையன் சேதுபதி மண்டபத்தில் இன்று (13/07/2020) தலைவர் கார்மேகம் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அறக்கட்டளை மூலம் முதியோர் மறுவாழ்வு இல்லம் கட்ட அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் செயலாளர் அன்பழகன், பொருளாலர் முருகேசன், இலங்காமணி மற்றும் நிர்வாகிகள் பால்ச்சாமி, ராதாகிருஷ்ணன், விஜயரூபன், வினோத்குமார், சுந்தர், சண்முகராஜன், விஜயரஜ்,ரவி, ரமேஷ்கண்ணா, மலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கீழை நீயூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.