8
இராஜபாளையம் அருகே வீட்டில் வைத்து மது விற்பனை செய்த ஒருவர் கைது அவரிடம் இருந்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் தளவாய்புரம் போலிசார் நடவடிக்கை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மது பாட்டில் விற்ப்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.