Home செய்திகள் மதுரையில் கொரோனா கண்டுபிடிக்கும் வகையில் சுகாதாரத் துறையின் சார்பில் 42 மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப் பட்டன.

மதுரையில் கொரோனா கண்டுபிடிக்கும் வகையில் சுகாதாரத் துறையின் சார்பில் 42 மருத்துவ பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப் பட்டன.

by mohan

மதுரை மாவட்டத்தில் கொரானா தொட்டு கடுமையாக பரவிவருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இன்னும் 641 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . இதில் சிகிச்சை பெற்று 423 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . இதுவரை 9 பேர் பலியான நிலையில் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது .மதுரையிலும் சென்னையைப் போல ஒரு தீவிரமாக பரவி வருகிறது . இதனால் மதுரையிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனோ பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை அடுத்து மதுரையில் 42 நடமாடும் வாகனங்களை பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் , .பரிசோதனை செய்யவும் இந்த வாகனங்கள் இயக்கப்பட உள்ளன .மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து இந்த 42 வாகனங்களையும் துவக்கி வைக்கப்பட்டது . இதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர், ஒரு டிரைவர் உட்பட 4 பேர் ஒவ்வொரு வாகனங்களில் செல்கின்றனர்.இந்த வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பரிசோதனைகளை செய்து கொரோனா பரவலை, தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், எம்.எல்.ஏ க்கள் மாணிக்கம், பெரிய புள்ளான், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!