9
கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வத்திராயிருப்பு இளைஞர்கள் இயற்கை முறையில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரை தாங்களே தயாரித்து வீதி வீதியாக தெளித்து வருகின்றனர்.
கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுகுதி இளைஞர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்பிலை சாரை பிளிந்தும் , மஞ்சள் நீரை கலந்தும் தாங்களே இயற்கை மருந்து தயாரித்து வீதி வீதியாக இந்த மருந்தை தெளித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.