மதுரை ஆனையூர் அருகே பனங்காடி பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மர்ம நபர்கள் கடப்பாரை கம்பியுடன் வீடு ஒன்றின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சம்பவமானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நள்ளிரவு நேரங்களில் உலா வரும் இருவர் கையில் கடப்பாரை கம்பியுடன் பூட்டியுள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று திருடும் முயற்சியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்த 3 வீடுகளின் கதவை உடைத்துள்ளது தெரியவந்துள்ளதையடுத்து கூடல் புதூர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் கடப்பாரைகளுடன் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.