Home செய்திகள் காரியாபட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா;2500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

காரியாபட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா;2500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

by Askar

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் கலைஞரின்  97வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அந்த விழாவில் ஆவியூர் கிராம கிளை கழகம் சார்பாக அரிசி, காய்கறி போன்ற பொருட்கள் 2500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆவியூர் கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், மேற்கு ஒன்றியசெயலாளர் கண்ணன், காரியாபட்டி நகர செயலாளர் செந்தில் மற்றும் கிளைக் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆவியூர் கிராமங்களில் வசிக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்றும் பள்ளி முன்பு வைத்தும் பொருட்கள் வழங்கினர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!