தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவதற்கு அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது!
தேனி மாவட்டத்தில் கொரோணா வைரஸ் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்த நிலையில் இன்று ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டதால் முக்கியமான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் சிறு சிறு கடைகள் வியாபாரத்திற்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 17 நோன்புகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 13 நோன்புகள் இருக்கும் இந்நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில தெருவில் நோன்புக்கஞ்சி வழங்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து வருகின்றனர் எனவும் அதனைச் சுட்டிக்காட்டி தேனி மாவட்டத்திலும் சமூக விலகலை கடை பிடித்து நோன்பு கஞ்சி வழங்குவதற்கு அனுமதி தரவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களிடம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக எம் சையது சுல்தானா உலவி நிஜாமுதீன் யூசுப். ஹாஜி வெற்றி முஸ்தபா நூர் முகமது நிஜாம் தேவதானப்பட்டி பள்ளி நிர்வாகி. கோரிக்கை வைத்தார்கள் . மேலும் பள்ளி வாசல் திறந்து சமூக விலகலை கடைபிடித்து தொழுதலை செய்வதற்கு தமிழக அரசுகோரிக்கை வைத்தனர்.
Aசாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.