குற்றாலம் போலீஸ் சரகம் பாட்டப்பத்து கிராமம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 60), இவர்களுக்கு 4மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் அவரது பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி இசக்கியம்மாள் அவரது கணவர் சுடலைமுத்து விடம் புகார் கூறியுள்ளார். ஆனால் சுடலைமுத்து அவரது பேத்தியை கண்டிக்காமல் இசக்கியம்மாளை கண்டித்ததால் மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த ஆறாம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனால் காணாமல் போன இசக்கியம்மாளை அவரது கணவர் சுடலைமுத்து மற்றும் அவரது மகன்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்த நிலையில் குற்றாலம் – பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஒரு தனியார் தோப்பில் உள்ள கிணற்றில் இசக்கியம்மாள் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இசக்கியம்மாளின் உடலை மீட்டனர். அதை தொடர்ந்து போலீசார் இசக்கியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.