Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளை மேல தாள கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்..

காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளை மேல தாள கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்..

by ஆசிரியர்

காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளை (M.K ராதா அறக்கட்டளை) சார்பாக பருத்திவீரன் புகழ் காரியாபட்டி லட்சுமி உடர்பன் மேள தாள கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள மேல தாள இசைக் கலைஞர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பாக (MK ராதா) அரிசி, மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி கொண்டு வருகிறது. அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மேலதாள கலைஞர்கள் பெரிதும் ஆப்தி க்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு நாடக சங்க உறுப்பினர் புகழ்பெற்ற மேடை நாடக நகைச்சுவை நடிகர் எம்.கே. இராதாகிருஷ்ணன் சார்பில் மளிகைப் பொருட்கள், அரிசி மற்றும் காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நாடகக் கலைஞர் இராதாகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அரசு அதிகாரிகள் அனுமதி பெற்று அனைவரையும் சமூக இடைவெளி விட்டு நிறுத்தி தனித்தனியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது காரியாபட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தன்னார்வலர்கள் விஜயகுமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!