11
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் மற்றும் அங்கு வாழும் தமிழர்கள் இணைந்து மதுரை காவல்துறைக்கு 5 லட்சம் மதிப்புள்ள முழுக்கவச ஆடைகளை வழங்கியுள்ளனர்.
மதுரையில் கொரானா பாதித்த 111 நபர்கள் வசித்த 20க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள முழுக்கவச உடைகள், முகக்கவசம் மற்றும் முகக்கண்ணாடி ஆகியவை அடங்கிய 430 செட்க்களை மதுரை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் அமெரிக்க வாழ் சான் பிராஸ்சிகோ தமிழ்மன்றம் மற்றும் தமிழர்கள் சார்பாக பாலா என்பவர் வழங்கினார்.
அதற்கு காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.