8
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள 1773 எண் மதுக்கடையில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பூசைகள் செய்யப்பட்டது. மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி கோடுகளும் போடப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மது பிரியர்கள் சிலர் வேடிக்கையாக பார்த்துச்சென்றனர். இந்த செய்தி வாட்ஸ்அப்பில் பரவியதால் பேரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் அந்த கடைக்கு இன்று சீல் வைத்தார். மற்றும் இதுபோன்ற சம்பவங்களில் வேறு கடைகளில் நடைபெற்று இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்.
You must be logged in to post a comment.