ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.!
ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்”
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்”
பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்கள் அனுமதி பெற இணையதளம் அறிவிப்பு.
http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் அனுமதி பெறலாம் – சென்னை மாநகராட்சி.
நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும்.
200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும்.
You must be logged in to post a comment.