இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர் குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்க மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு நிறுவனர், மாநிலத் தலைவர் எஸ்.கருப்பையா வழிகாட்டுதல்படி இராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆலோசனைபடி, இராமநாதபுரம் வட்டாரம் கவரங்குளம், பாப்பாகுடி, களத்தாவூர், பேராவூர், வன்னிக்குடி கிராமங்களில் 116 பயனாளிகளுக்கு இன்று (02.05.2020) வழங்கப்பட்டது.
மத்திய மாநில எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எஸ் கர்ணன், மாவட்ட செயலர் வி.கே.சேக்கிழார்,மாவட்ட பொருளாளர் கே.பாபு, தலைமை நிலையச் செயலர் எஸ்.ஆர்.காளிதாசு, செய்தி தொடர்பாளர் சி.தங்கவேலு, நிதி செயலர் ஆ.ராமர், இராமநாதபுரம் நகர் செயலர் ஆர்.அழகுகுமார், இராமநாதாரம் வட்டார செயலர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட துணைத்தலைவர் வே.முருகன், மாவட்ட துணைசெயலர் மு. கருப்பையா, கல்வித்துறை மாவட்டத் தலைவர் எம்.விஜயகுமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராமலிங்கம், நயினார்கோவில் பொறுப்பாளர் ஆசிரியர் ஆனந்தகுமார், ஆசிரியர் அபிமன்னன், போகலூர் பொறுப்பாளர் தியாகராஜன், முதுகுளத்துார் பொறுப்பாளர் ஞானசேகர், ஆசிரிய பயிற்றுநர் கொடிகை கவிஞர் பாஸ்கரன், களத்தாவூர் அழகேசன், பாப்பாகுடி வடிவேல், தமிழ் புலி கட்சி மாவட்ட செயலர் தமிழ் முருகன், கவரங்குளம் தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் கஜேந்திரன், வன்னிக்குடி ராமகிருஷ்ணன்,பேராவூர் ஊராட்சி தலைவர் மாரிமுத்து, பேராவூர் வையமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். கரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்து முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.