Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) ஊழியர்களுக்கு அத்தியாசிய பொருட்கள்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) ஊழியர்களுக்கு அத்தியாசிய பொருட்கள்..

by ஆசிரியர்

இன்று ( 02 . 05 . 2020 ) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் , மதுரை மண்டலம் மற்றும் கூட்டாண்மை அலுவலக அலுவலர்கள் , உதவிப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பேருந்து சுத்தம் செய்பவர்கள், நேரக்காப்பாளர்கள், டிக்கெட் கேன்வாசர்கள் என மொத்தம் 140 நபர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை மதுரை போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர்  எம்.ஏ.முருகேசன் வழங்கினார்.

மேலும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுனர்கள்களின் சேவையினை பெரிதும் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொருவரும் நபரும் சமூக விலகலை கடைப்பிடித்தும் , முக்கவசம் அணிந்தும் , கைகளை சோப்பின் மூலம் அடிக்கடி சுத்தம் செய்தும் , தனித்திருந்தும் கொரனா பரவலை தடுத்திட வேண்டும் என மேலாண் இயக்குனர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது கோட்ட துணை மேலாளர்கள் ரவிக்குமார், பாஸ்கர், முருகானந்தம், கோபாலகிருஷ்ணன், தயாளகிருஷ்ணன், ரமேஷ், உதவி மேலாளர்கள் சதீஸ்குமார், சக்தி, மாரிமுத்து, நாகசந்திரபோப், சண்முக்குமார், பூமிநாதன் மற்றும் கிளை மேலாளர்கள் ராஜசேகர் , கார்த்திக் , மற்றும் உதவிப்பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

) செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!