Home செய்திகள் உசிலம்பட்டியில் கொரோனா.வீண் வதந்திகளை பரப்பாதீா்கள்.அதிகாாிகள் கோாிக்கை.

உசிலம்பட்டியில் கொரோனா.வீண் வதந்திகளை பரப்பாதீா்கள்.அதிகாாிகள் கோாிக்கை.

by mohan

தமிழமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏப் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைப் பொறுத்தவரை வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.இதில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டவா்களால்தான் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று  பரவியது என்பதால் தமிழகத்திலும் குறிப்பாக உசிலம்பட்டி பகுதியிலும் அம்மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் விபரம் சேகாிக்கப்பட்டு அவா்களின் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாாிகளால் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.இவா்கள் அவ்வப்போது பாிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.இதேபோல் எழுமலையில் 3 பேரும் உசிலம்பட்டி எஸஒஆா் நகாில் 2 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனா்.ஆனால் சிலா் சமூக வலைத்தளங்களில் கொரோனா வந்து அழைத்து செல்லப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனா்.உண்மையில் உசிலம்பட்டி பகுதியில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை.பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.வீண் தகவல்களை பரப்பி மக்களை அச்சுறுத்த வேண்டாம் என அதிகாாிகள் தொிவித்தனா்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!