முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 17/02/2020 அன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிராபானு கமால் பெண்கள் பாதுகாப்பாக வாழ விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் A.ஜீவரத்தினம் போலிஸ் இன்ஸ்பெக்டர் AWPS, இராமநாதபுரம் பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு “காவலன் ஆப்” என்ற செயலியை உருவாக்கியது பற்றியும், பெண்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் தன்னை பாதுகாத்து கொள்ள கல்வி, ஒழுக்கங்களில் சிறந்து விளங்குவதுடன் யோகா போன்ற மனவளக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக IQAC ஒருங்கிணைப்பாளர் அன்வர் ரொ சாஹின் நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
You must be logged in to post a comment.