9
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கோயில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. பிப். 21இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி, 22ல் தேரோட்டம் நடைபெறும். வரும் 23 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சிவா ராத்திரி விழா ஏற்பாடுகளை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தக்கார் என்.குமரன் சேதுபதி,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், முருகன், மேலாளர் முருகேசன், நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
You must be logged in to post a comment.