மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு வழங்கி உள்ளார்கள்.கடந்த 2019 ம் ஆண்டு POCSO ACT (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 107 நபர்களுக்கும் கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர புலன்விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.