9
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிசம்பர் 30-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாண்டி அதன் பகுதிகளில் உள்ள எருமார்பட்டி நரிக்குறவர்கள் வசிக்கும் இடங்களில் நேரில் சென்று அவர்களிடம் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அங்குள்ள நரிக்குறவ பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.