Home செய்திகள் மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

by mohan

 மதுரை பழங்காநத்தம்  மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள மின்மாற்றியில் திடீரென்று புகை வந்தது. மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கவே  பசுமலையில் உள்ள மெயின் மின்மாற்றியை இணைப்பை உடனடியாகத் துண்டித்து மேலும் விரைந்து இங்கே வந்து அதில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் வரும் நேரத்தில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் மின்வாரிய ஊழியர்கள் செயல்பாட்டினால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!