5
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரன் பலி.!
மதுரை மாவட்டம் திருநகர் அடுத்த முல்லை நகர் பகுதியில் இன்று காலை அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரன் மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து அவரதுஉடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.