தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் பெரும் தீ விபத்து. கோவில்பட்டியில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனமானது சிறப்பு விற்பனை நிலையம் ஒன்று அமைத்து உள்ளது. அதில் இன்று30.10.19 அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது .தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அனைத்து வருகிறார்கள் .மேலும் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம் என தகவல் வெளியாகியுள்ளது .தீ விபத்து குறித்து கோவில்பட்டி வடக்கு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.ஒரே நிருவனத்தின் கடையில் மாவட்டம் மாறி மாறி அடிக்கடிதீ விபத்து ஏற்படுவது சா்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.