8
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உலக பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு பார்வையிட்டார்.திருவண்ணாமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் பேரிடர் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் , பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
You must be logged in to post a comment.