6
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பழைய டியூப் லைட்டுக்கு பதிலாக எல்இடி லைட் பொருத்தம் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது. இதில் பல இடங்களில் எல்இடி லைட்டுகள் பழுதாகி எரியாமல் உள்ளது. தரமற்ற வகையில் எல்இடி லைட்டுகள் பொருத்துவதால் பொருத்திய பத்தே நாட்களில் அனைத்து எல்இடி விளக்குகள் பழுதடைந்து உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் அதை கண்டுகொள்வதில்லை.இதில் 75 மற்றும் 76 ஆவது வார்டு பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட எல்இடி லைட்டுகள் பழுதடைந்து உள்ளது. இதனால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.