7
மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மழைநீர் சேர்ந்து உள்ளது. அதில் டெங்கு கொசு உருவாகி உள்ளது.மாநகராட்சியிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் வெகு வேகமாக டெங்கு காய்ச்சல்பரவும் என அச்சத்தில் உள்ளார்கள். மழை பெய்து கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டது எனினும் மழை நீர் வடியாத காரணத்தினால் தண்ணீர் அங்கேயே தேங்கி உள்ளது. இதை அகற்ற உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.