6
உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மதுரை காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகர காவல்துறையால் மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் பொதுமக்கள் தங்கள் செல்போனில் இதனை பதிவிறக்கம் செய்து வெளியூர் செல்லும் போதோ பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போதோ போலிசாருக்கு தகவல் தெரிவித்தால் போதும்.உங்கள் வீடிருக்கும் பகுதி காவலர்களால் கண்காணிக்கப்படும்.மேற்கண்ட தகவலை விளக்கியும் பொதுமக்களுககு மதுரை காவலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உசிலம்பட்டி நகர சார்பு ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலிசார் நகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு விழிபபுணர்வை ஏற்படுத்தினர்.உடன் காவலர்கள் பழனிச்சாமி செல்வம் விக்னேஷ் சிவன்பாண்டி இருந்தனர்.
You must be logged in to post a comment.