8
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வாகன விற்பனை நிலையத்தில் திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் துறை சார்பாக தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.மேலும், விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
You must be logged in to post a comment.