13
மதுரை ரயில் நிலையத்தில் முன் இருந்த மீன் சிலை சில காலமாக யார் கண்ணிலும் படுவதில்லை. மதுரையில் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக பல்வேறு அடையாளங்கள் உண்டு. அதில் மதுரை ரயில் நிலையம் முன் இருந்த பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தை குறிக்கும் மீன் சின்னம். இது பல வருடங்களாக மதுரை ரயில் நிலையம் முன் இருந்தது.
ஆனால் திடீர் என ஸ்மார்ட் சிட்டி மாற்றம் என்ற பெயரில் உலோகத்திலான ஆன அந்த மீன் சின்னம் இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. இது பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் நோக்கில் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.