இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மூலம் பிளவர் இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் பத்து லட்சம் பிளவர் இறால் குஞ்சுகள் மண்டபம் தோணித்துறை கடல் பகுதியில் விடப்பட்டன. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் கொச்சின் கடல் வாழ் பல்லுயிரிகள் துறை தலைவர், மூத்த விஞ்ஞானி கே.கே. ஜோஷி சிறப்புவிருந்தினராக பங்கேற்று 10 லட்சம் இறால் குஞ்சுகளை தோணித்துறை பாக் ஜலசந்தி கடலில் விட்டார்.
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மண்டபம் பிராந்தியத்தின் பொறுப்பு விஞ்ஞானி ஜெயக்குமார், விஞ்ஞானிகள் அலுவலர்கள், மீன் வளத்துறை அலுவலர்கள், மண்டபம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர். கடல் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் சங்கர், முனைவர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
.
You must be logged in to post a comment.