Home செய்திகள் மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

by ஆசிரியர்

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பவுல் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைப்பெண்கள் போன்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர்கள், ஆதரவற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சோப்பு மற்றும் ஆடைகள் என பல வகையான பாலசரக்குபொருட்கள் அடங்கிய பெட்டிகளுடன் உள்ள நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.  இந்நிகழ்ச்சி தொண்டு நிறுவன நிர்வாகி ராசு, கருணாகரன் தலைமையில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செபாஸ்டின் செய்திருந்தார்.

இதுபோன்று மே 1 ம்தேதி உழைப்பாளர்கள் தினத்தில் ஊனமுற்றோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அந்த .தொண்டு நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!