12
இராமேஸ்வரம் ரயில் நிலையம் மூன்றாவது நடை மேடையில் இருந்து நேற்று (21/4/19) இரவு 8:15 க்கு புறப்படும் சென்னை ரயிலின் (சேது எக்ஸ்பிரஸ்) சக்கரத்தில் தலையை வைத்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அப்பெண் மஞ்சள் நிற சேவை அணிந்திருந்தார். அவரது வலது கையில் கே. ராஜேந்திரன் என பச்சை குத்தப்பட்டு இருந்தது.
ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு எஸ்.ஐ., தனுஷ்கோடி தலைமையில் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
You must be logged in to post a comment.