திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செக்கடி தெருவை தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மனைவி நாகஜோதி (வயது 28). வேலுச்சாமி தற்போது நிலக்கோட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுமார் 12 மணி அளவில் கட்டிலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நிலக்கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் முன்னிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயங்களுடன் இறந்து கிடந்த நாகஜோதி உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு நாகஜோதி உடலை படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் யாரும் படம் எடுக்க வேண்டாம் என போலீசார் தடுத்தனர். ஏன் படம் எடுக்க கூடாது என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பொம்பளைப் பிள்ளை விஷயம் அதனால் படம் எடுக்க வேண்டாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் நாகஜோதி கணவர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப் பகலில் இளம்பெண் காயங்களுடன் கட்டிலில் அப்படியே கிடந்ததால் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் நாகஜோதி இறுதியாக யாரிடம் செல்போனில் பேசினார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.