இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமையில் வனவர் ஆனந்தன், வனக்காப்பாளர்கள் ஜான்சன், முனியசாமி மற்றும் வன பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பாம்பன் சின்னப்பாலம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திடமாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் பிளாஸ்டிக் பாக்கெட், அலுமினியம், சில்வர் பாத்திரங்களில் ஆமை இறைச்சி இருந்தது தெரிந்தது. இது தொடர்பான விசாரணையில், அக்காள்மடம் மீனவர் காலனி மரிய ராஜன் மகன்கள் எம். அந்தோணி சந்தியாகு 29, எம்.ரூபன் 25, சேதுபதி நகர் அருள்தாஸ் மகன் ஏ.மைக்கேல் 29 ஆகியோர் ஆமையை கூறு போட்டது தெரிந்தது.
இந்த இறைச்சியை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் சின்னப்பாலம் யேசுதாஸ் மகன் விக்னேஷ் (19) உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஆமையை கூறு போட்டது தொடர்பாக தப்பியோடிய அக்காள் மடம் மீனவர் காலனி மரிய ராஜன் மகன் யேசா 20, பாம்பன் விவேகானந்தர் நகர் பஞ்சவர்ணம் மகன் பூஜை துரை 32, வியாபாரிகள் தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று ஜோசப் நாளி, தங்கச்சிமடம் ரமேஷ், தீனா, டேவிட் ஆகியோரை தேடி வருகின்றனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்த 70 கிலோ ஆமை இறைச்சி, ஆட்டோ, 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
You must be logged in to post a comment.