திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தினந்தோறும் விவசாயிகள் குறிப்பாக அரளிப் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சுமார் ஒரு கிலோ பிடிக்கக்கூடிய பூக்களை பாலிதீன் பைகளில் அடைத்து கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பாலித்தீன் பைகளில் அடைப்பதன் மூலம் பூக்களை கண்ணில் பார்த்து வியாபாரிகள் விலை பேசி வாங்குவது வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் முற்றிலுமாக பாலித்தின் பைகளையும் கூறி ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இதனை உடனடியாக அமுலுக்கு கொண்டு வந்த தமிழக அரசு அனைத்து அனைத்து ஊர்களிலும் பேரூராட்சிகளிலும் கிராமப்புறங்களிலும் கடுமையாக நடைமுறைப்படுத்த முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து பயன்பாட்டில் இருந்து பொதுமக்களை விலக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பனியன் நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து அதற்குரிய அபராதம் விதித்து உழைத்து வருகிறார்கள். இதேபோன்று நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டை பேரூராட்சி அதிகாரிகள் பாலிதீன் பைகளை பூக்களை பாலிதீன் பைகளை பூக்களை நிரப்பி கொண்டு வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சென்று பூ மார்க்கெட்டில் பூக்களை பூக்களுடன் பறிப்பதால் பூக்களை மீண்டும் அதிகாரிகளிடம் இருந்து பிடுங்குவதற்கு விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தள்ளுமுள்ளும், தகராறும், வாய்த்தகராறு, தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment.