கடையம் அருகே சம்பன் குளம் ரஹ்மானியா துவக்கப்பள்ளியில் இலவச மருத்து முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கடையம் அருகே சம்பன்குளம் ரஹ்மான் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார் தலைமை வகித்தார். முகாமை அம்பாசமுத்திரம் காவல்துணைக் கண்காணிப்பாளர் ஜாகீர் உசேன் தொடங்கி வைத்தார். ஜமாஅத்தலைவர் முஹம்மது யூசப், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் முஹம்மது ஆரிப், ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார், ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் முஹம்மது உசேன், தர்மபுர மடம் ஊராட்சி செயலாளர் குமரேசன்,ஜமாஅத் நிர்வாகிகள் சையது, பஹ்ருதின் அலி, ஜபருல்லா, சதாம் உசேன், எஸ்என் அப்துல் ரஹ்மான், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகர்வால் கண் மருத்துவமனை தலைமை முகாம் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
தூத்துக்குடி மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையம் மருத்துவக் குழுவினர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கடையம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவக் குழுவினர் பொதுமருத்துவம் மற்றும் அல் ஷிபா மருத்துவமனை சித்த மருத்துவக் குழவினர் சித்த மருத்துவ சிகிச்சையளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை தர்மபுரம். மடம் ஊராட்சி முன்னாள் தலைவர் டிபிஎம் ரசூல் முஹம்மது செய்திருந்தார். முகாமில் கல்யாணிபுரம்,சம்பன்குளம், அழகப்பபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்க்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செய்தி, கடையம்: பாரதி
You must be logged in to post a comment.