Home செய்திகள் பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி மையம்..

பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி மையம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் இன்று 21.07.2018 நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.2.47 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதன் அடையாளமாக கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.

 

​மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் விழாவிற்கு தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பிலும் தங்கச்சிமடம் ஊராட்சியில் ரூ.31.30 இலட்சம் மதிப்பிலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ரூ.31.30 இலட்சம் மதிப்பிலும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.30.70 இலட்சம் மதிப்பிலும், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பிலும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஏர்வாடி ஊராட்;சியில் 31.50 இலட்சம் மதிப்பிலும்ää பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் ரூ.31 இலட்சம் மதிப்பிலும், கமுதி ஊராட்சி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் ரூ.30.50 இலட்சம் மதிப்பிலும் என 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 ஊராட்சிகளில் மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்பில் புதிதாக அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி  கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 

இந்த 8 அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்களை இன்றைய தினம்  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.  இதன்மூலம் அந்தந்த கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தினை செலவிடவும், இளைஞர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தினை பேணிப்பாதுகாத்திடும் வகையில் உடற்பயிற்சி செய்திடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

​அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15இலட்சம் மதிப்பிலும், இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6 இலட்சம் மதிப்பிலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வளாக சுற்றுச்சுவர்களை திறந்து வைத்தார்.

​இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமாலினி செயற்பொறியாளர் சிவராணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்லைவர் ஜெயஜோதி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தசெல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!