இராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பாம்பன் பகுதி விசைபடகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.