21
கடந்த சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் சம்பந்தமாக மக்கள் செய்தி மையம் என்ற இணையதளத்தில் செய்தி வெளி வந்துள்ளது. அச்செய்தியை சம்பந்தப்படுத்தி நுங்கம்பாக்கம் காவல்துறை ஆய்வாளரும், அவரைச் சார்ந்தவர்களும் மக்கள் செய்தி மையத்தின் மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்செயலை கண்டித்து சென்னை காவல் துறை ஆணையரிடம், சம்பந்தபட்ட ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக அனைத்து பத்திரிக்கை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பத்திரிக்கையாளர் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.