தென்காசியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்,அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி மாவட்டத்தில் கொரானா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான முனைவர் எம்.கருணாகரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தா் தயாளன், காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் கல்பனா, திருநெல்வேலி திட்ட இயக்குனர் மந்திராசலம், திருநெல்வேலி பேரூராட்சிகளின்உதவி இயக்குனர் குற்றாலிங்கம், கோட்டாட்சியர் பழனி குமார் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )மரகத நாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் குணசேகரன்,இணை இயக்குனர் நலப்பணிகள் ,தென்காசி மரு.முருகவேல் ,துணை இயக்குனர் நலப்பணிகள் மரு. ராஜா, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.