நயினார் கோயில் கிராமத்தில் நெல் விதை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நெல் விதை நேர்த்தி முறையை பற்றி மதுரை வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி வே. ஹேமலதா விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர் . இதில் 1 கிலோ விதைகளுக்கு 2 கிராம் /லிட்டர் தண்ணீரில் கார்பன்டாசிம் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்றும், விதைகளை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மீதமுள்ள நீரை வடிகட்ட வேண்டும் என்றும் , இவ்வாறு செய்வதன் மூலம் நெல் பயிர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும் என்று செய்முறை விளக்கம் அளித்தார். மேலும் நாற்றங்காலில் நெல் பயிர் நன்றாக வளர உதவும் என விவசாயிகளுக்கு செயல்முறை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
73
previous post
You must be logged in to post a comment.