22
மதுரையில் திரிபுரா பவுண்டேசன் சார்பில் நடத்தப்படும் மாலை நேர வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. வசந்தி ரெங்கநாதன் ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து தென் மாநில ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி கூறுகையில்: திரிபுரா பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாட்டில் 100 சென்டர்கள் இருக்கின்றன. மதுரையில் 18 கிராமங்களில் அரசு பள்ளியில் பயிலும் 800 குழந்தைகளுக்கு வகுப்பு முடிந்தவுடன் மாலை நேர வகுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 குழந்தைகள் பயில்கின்றனர். அவர்கள் ஒழுக்கமாக வளர்வதற்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 18 வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி முகாம் நடைபெற்றது. என கூறினார்.
மதுரை செய்தியாளர் கனகராஜ்
You must be logged in to post a comment.