25
மதுரை மாவட்டம். ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலைச்சாமிபுரத்தை சேர்ந்த ரவி என்பவர்க்கு விபத்தில் இரண்டு கால்களும் செயல் இழந்து, வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதாக, சமூகவலை தளங்களில் வந்த தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மணிவண்ணன் உத்தரவுப்படி, மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா வழிகாட்டுதலின்படி, ஒத்தகடை காவல் நிலைய ஆய்வாளர். ஆனந்ததாண்டவம் கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் ரவி இருந்ததால், அவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் அரிசி மற்றும் மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவி செய்தார்.
You must be logged in to post a comment.