43
மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “நபி வழி திடல் தொழுகை நடத்தினர். 300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ” பக்ரீத் பண்டிகையை ” முன்னிட்டு சிறப்பு நபி வழித்திடல் தொழுகை நடைபெற்றது. இதில் 400 ஆண்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 700 பேர் தொழுகையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்படுகளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் மதுரை மாவட்ட தலைவர் கலீல் . தாரிக் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்