65
கொடைரோடு பகுதிகளில் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சார நிறுத்தம்..
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
இதையொட்டி கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பகோட்டை, முருகத்தூரான்பட்டி, சாந்தலாபுரம், நிலக்கோட்டை தொழிற்பேட்டை, பொட்டிக்குளம், பள்ளப்பட்டி, மாவூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.