24
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர், கூலித் தொழிலாளர்கள்,ஆதரவற்ற குடும்பத்தினர், ஏழைகளின் வீடுகளுக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா சென்று கொடுத்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரானா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஒரு சிலருக்கு உணவு கிடைக்காமல் அவதிப்படுவதை அறிந்து ஆயிரம் குடும்பத்தினருக்கு உணவு சமைத்து அவர்கள் வசிப்பிடம் சென்று கொடுத்து வருகிறேன் என்றார்.
.
You must be logged in to post a comment.